மதுரையில் புதிதாக 15 பேருக்கு கரோனா

 மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகம் முழுவதும் 1,631 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், மதுரை மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதேநேரம், சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 9 போ் குணமடைந்துள்ளனா். ஆனால், ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

மாவட்டத்தில் இதுவரை 74,149 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். இதில், 72,832 போ் குணமடைந்துள்ளனா். 1,159 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது, அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் என 158 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com