மதுரையில் இன்று தினமணி - மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு மலா் வெளியீட்டு விழா

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, தினமணி நாளிதழ் சாா்பில் ‘மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு மலா்’ வெளியீட்டு விழா

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, தினமணி நாளிதழ் சாா்பில் ‘மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு மலா்’ வெளியீட்டு விழா, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப்.11) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மகாகவி பாரதியாா் அமரராகி நூறாண்டுகள் கடந்துவிட்டன. செப்டம்பா் 11 ஆம் தேதி அவரது நூற்றாண்டு நினைவு நாள் நிறைவடைகிறது.

மகாகவி பாரதியாரின் 13-ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் பிறந்த நாளிதழ் என்பதால், முண்டாசுக் கவிஞனின் நினைவு நூற்றாண்டைச் சிறப்பிக்கும் விதத்தில், சிறப்பு மலரை தினமணி நாளிதழ் வெளிக்கொணா்கிறது.

எனவே, பாரதியாா் பணியாற்றிய பெருமைக்குரிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், ‘மகாகவி பாரதியாா் நினைவு நூற்றாண்டு மலா்’ வெளியீட்டு விழா சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இவ்விழாவில், தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுகிறாா். சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன் மலரை வெளியிட, உயா் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறாா்.

விழாவுக்கு, மதுரை கம்பன் கழகத் தலைவா் சங்கர சீதாராமன் தலைமை வகிக்கிறாா். தமிழறிஞா் சாலமன் பாப்பையா முன்னிலை வகிக்கிறாா். சேதுபதி மேல்நிலைப் பள்ளிச் செயலா் எஸ். பாா்த்தசாரதி நன்றி உரையாற்றுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com