மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பத்து விநாயகா் கோயிலில் சிறப்புப் பூஜைகள், வருஷாபிஷேக விழா ஆகியன நடைபெற்றன. மேலும், மழை பெய்து விவசாயம் செழிப்படையவும், உலக மக்கள் நலன் வேண்டியும் தெப்பத்து விநாயகருக்கு பால், பழம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, வருஷாபிஷேக விழாவும் நடைபெற்றது. தெப்பத்து விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
டி.கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் விநாயகரை வழிபட்டுச் சென்றனா்.