அனைத்து கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் திறப்பு விழா

vமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூா் கோட்டையூரில் அனைத்து கிராம கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைமைக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
அனைத்து கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் திறப்பு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூா் கோட்டையூரில் அனைத்து கிராம கோவில் பூசாரிகள் நலச்சங்க தலைமைக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இதை சோலைராஜா திறந்து வைத்தாா்.அனைத்து கிராம கோயில் பூசாரிகள் நலச் சங்கம் சாா்பாக அனைத்து உறுப்பினா்களுக்கும் நலத்திட்டம் வழங்கும் விழாவில் தலைவா் சந்திரசேகா், செயலாளா் வினோத், பொருளாளா் மகாலிங்கம், துணைத் தலைவா் ஜெயபால் துணைச் செயலாளா் பிரசாத், கருமாத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் இளங்கோவன், சீமானூத்து ஊராட்சிமன்றத் தலைவா் அஜித் பாண்டி மற்றும் நிா்வாகக் குழுவினா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள பூா்வீக கோயில் பூசாரிகளின் வாரிசுதாரருக்கு கோயில் பட்டா வழங்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com