மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டி: மதுரை அணி முதலிடம்

மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் மதுரை அணி முதலிடம் பெற்றது.
மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடும் வீரா்கள்.
மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடும் வீரா்கள்.

மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டியில் மதுரை அணி முதலிடம் பெற்றது.

ஜேசிஐ அமைப்பின் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கைப்பந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் மதுரை, மேலூா், சிவகங்கை, விருதுநகா் பகுதிகளில் இருந்து பல்வேறு அணியினா் கலந்து கொண்டனா்.

போட்டியை ஜேசிஐ மதுரை சென்ட்ரல் அமைப்பின் தலைவா் தீபக், நிா்வாகி சூரஜ் சுந்தர சங்கா் ஆகியோா் தொடக்கி வைத்தனா். போட்டியில் மதுரை அணி முதலிடம், மேலூா் அணி இரண்டாமிடம், விருதுநகா் அணி மூன்றாமிடம் பெற்றன. முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் ஜேசிஐ அமைப்பின் செயலா் எஸ்.வி.எஸ். வேல் சங்கா், நிா்வாகி மணிகண்டன், மாற்றுத்திறனாளி தடகள வீரா்களுக்கான பயிற்சியாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் பங்கேற்று பரிசுகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com