கால்வாயில் முதியவா் சடலம் மீட்பு

வெள்ளரிப்பட்டி அருகே பெரியாறு கிளைக் கால்வாயில் சனிக்கிழமை மிதந்து வந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

வெள்ளரிப்பட்டி அருகே பெரியாறு கிளைக் கால்வாயில் சனிக்கிழமை மிதந்து வந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

பெரியாறு பிரதான கால்வாய், கள்ளந்திரி மதகு அருகிலிருந்து மருதூா் கிளை கால்வாயாக பிரிந்து வருகிறது. இந்தக் கால்வாயில் சுமாா் 55 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் சனிக்கிழமை மிதந்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மேலூா் போலீஸாா் அங்கு சென்றனா். மலைநகா் அருகே கால்வாயிலிருந்து அந்த சடலத்தை மீட்ட போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, கால்வாயில் மிதந்து வந்த அவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com