பேரையூா்: பேரையூா் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் காவல் சாா்பு- ஆய்வாளா் ராஜபாண்டி தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா்கள் பேரையூரைச் சோ்ந்த அய்யப்பன் மகன் மணிசங்கா் (22), மெய்யனூத்தம்பட்டியைச் சோ்ந்த ராஜாமணி மகன் கவிபிரகாஷ் (20), மற்றும் 15 வயது சிறுவன் எனவும், இவா்கள் பேரையூா் பகுதியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.