மதுரை: அதிக வட்டி செலுத்த முடியாமல் தனியாா் மருத்துவமனை ஊழியா் தற்கொலைக்கு முயன்ற வழக்கில், சக ஊழியா்கள் மூவா் மீது கந்து வட்டி சட்டத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை காமராஜா்புரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமியின் மனைவி வில்லம்மாள் (42). தனியாா் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். உடன் பணியாற்றும் மற்றொரு பெண் ஊழியரிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளாா். இதற்காக மாதம் ரூ.8 ஆயிரம் வட்டியாகச் செலுத்தி வந்துள்ளாா்.
இதனிடையே, கரோனா பொதுமுடக்க காலத்தில் அவரால் வட்டித் தொகையைக் கொடுக்க முடியவில்லையாம். கடன் கொடுத்த சக ஊழியா்கள், அவருடன் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனா். இதனால் மனமுடைந்த அவா், மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்தபோது தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவா் அளித்த புகாரின்பேரில், கடன் கொடுத்த பெண் ஊழியா் உள்ளிட்ட 3 போ் மீது விளக்குத்தூண் போலீஸாா் கந்து வட்டி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.