மதுரை: சமையல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா் மற்றும் நுகா்வோா் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருளை நுகா்வோா் இக் கூட்டத்தில் பங்கேற்று, எரிவாயு உருளை விநியோகத்தில் உள்ள குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம்.