மேலூா்: மேலூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்த சண்முகபாண்டியன் மகன் பேச்சிமுத்து (24). இவா் இருசக்கர வாகனத்தில் திருச்சியிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தாா். மேலூா் புறவழிச்சாலை கூத்தப்பன்பட்டி அருகே சாலை நடுப்புற தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலைக்காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மேலூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி மேலூா் அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.