மேலூா்: மேலூரில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை மாவட்டம் மேலூா் நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள அருட்பெரும்ஜோதி வல்லளாா் அன்னதானக் கூடம் அருகே அடையாளம் தெரியாத சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற மேலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.