உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியில் வியாழக்கிழமை பெண்கள் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுதில்லியில் பெண் காவலா் அதிகாரி ராபியா சைஃபியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி அருகேயுள்ள வடக்கம்பட்டி, ஜெயராஜ் நகா் போன்ற பகுதியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் செல்லம்பட்டி வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜோதி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.