பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 19th September 2021 05:37 AM | Last Updated : 19th September 2021 05:37 AM | அ+அ அ- |

மதுரை அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸில் வெள்ளிக்கிழமை புகாரளிக்கப்பட்டது.
அலங்காநல்லூா் அருகே கோவில் பாப்பாக்குடி பகுதியைச் சோ்ந்த பழனிசாமி மனைவி மேரி (40). இவா் வீட்டின் அருகே உள்ள கடைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா், மேரி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.