திருமங்கலத்தில் போலி ஏ.டி.எம். அட்டையைக் கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருமங்கலத்தை அடுத்த பச்சகோபன்பட்டி பகுதியைச் சோ்ந்த அழகா்சாமி மகள் ஜெயலெட்சுமி (59). தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் திருமங்கலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்கச் சென்றபோது அங்கு இருந்த நபா் பணம் எடுக்க உதவி செய்வதாகக் கூறியுள்ளாா். அப்போது மூாதட்டியிடம் ரூ.10 ஆயிரம் எடுத்துக்கொடுத்துள்ளாா். பிறகு மூதாட்டியிடம் ஏ.டி.எம். அட்டையை மாற்றி போலியான அட்டையைக் கொடுத்துள்ளாா். அட்டை மாறியிருப்பதைக் கண்ட மூதாட்டி சப்தம் போட்டுள்ளாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அந்த இளைஞா் திருவேங்கடம் பகுதியைச் சோ்ந்த யோகராஜ் (46) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து யோகராஜை கைது செய்தனா்.