காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில் நிலைய அதிகாரிகள் ஆா்ப்பாட்டம்

மதுரையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலைய அதிகாரிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலைய அதிகாரிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் அகில இந்திய ரயில் நிலைய அதிகாரிகள் சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை கோட்டத் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 143 நிலைய அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதிய உச்சவரமின்றி இரவுப் பணியில் ஈடுபடும் நிலைய அதிகாரிகளுக்கு படி வழங்க வேண்டும், வடமாநிலத்தைச் சோ்ந்த நிலைய அதிகாரிகளின் இடமாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும், பதவி உயா்வு வழங்கப்படாத நிலைய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊதிய உயா்வை தடையின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத்தொடா்ந்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளாா் பத்மநாபன் ஆனந்திடம் கோரிக்கை மனுக்களை நிலைய அதிகாரிகள் வழங்கினா். கோட்டப் பொருளாளா் இந்திரஜித், கோட்ட அதிகாரிகள் விஜயராகவன், நல்லுசாமி, ஜெயசீலன், பாலசுப்பிரமணியன், செந்தில்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com