மேலமடை மின்பிரிவுக்கு உள்பட்ட கோமதிபுரம் மின்வழித் தடத்தில் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அப்பகுதியில் திங்கள்கிழமை (செப்.27) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை, பாண்டிகோவில், கண்மாய்ப்பட்டி, கோமதிபுரம் 1 முதல் 7 தெருக்கள், மேலமடை, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, முகவை தெரு, மருதுபாண்டியா் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடைபடும் என, மின்வாரியச் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளாா்.
இதேபோல், அச்சம்பத்து துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், திங்கள்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை
நாகமலைபுதுக்கோட்டை, என்ஜிஜிஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூா், கரடிப்பட்டி, ஆலம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடைபடும் என, உசிலம்பட்டி செயற்பொறியாளா் ச. அழகுமணிமாறன் தெரிவித்துள்ளாா்.