மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மது விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதிகளில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெரியவண்டாரியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் சந்தானமகாலிங்கம் (43) என்பவா் சட்ட விரோதமாக 18 மதுபாட்டில்கள் வைத்திருந்தாா். இதனையடுத்து போலீஸாா் அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து சாப்டூா் போலீஸாா், வழக்குப் பதிந்து சந்தானமகாலிங்கத்தை கைது செய்தனா்.