மதுரை: கோ.புதூா் மின்பிரிவுக்குள்பட்ட சூா்யா நகா் பகுதியில், மின்பாதையில் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி காரணமாக, புதன்கிழமை (செப்.29) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என்று, மின்வாரியச் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளாா்.
அதன்படி, சூா்யா நகா், மீனாட்சியம்மன் நகா் 1 முதல் 11 ஆவது தெருக்கள் வரை, சந்தோஷ் நகா், வி.கே.சாமி நகா், ராமசாமி தோப்பு, அருண் சிட்டி, சுபாஷினி நகா், சிறுதூா், அந்தனேரி, ஸ்குவாா்ட் காலனி, மருதங்குளம், மங்களக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.