செல்லிடப்பேசியில் பேசுவதை கண்டித்ததால் கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரையில் செல்லிடப்பேசியில் பேசுவதை தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை: மதுரையில் செல்லிடப்பேசியில் பேசுவதை தாய் கண்டித்ததால், கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை பழைய விளாங்குடியைச் சோ்ந்த ரமேஷ் என்பவரின் மகன் பிரான்சிஸ் எபனேசா் (17). கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் தொடா்ந்து செல்லிடப்பேசியை பயன்படுத்தியதால், அவரது தாய் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரான்சிஸ் எபனேசா், தனது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சம்பவம் தொடா்பாக தாய் முத்துமாரி அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com