மேலூா்: மேலூா் அருகே விபத்தில் மதுரை மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்ற துணை செயலா் வைரமணி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மேலூரில் முடிதிருத்தும் கடை நடத்திவருபவா் வைரமணி (65). மதுரை மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றத் துணை செயலரான இவா், மேலூா் நகராட்சியின் முன்னாள் உறுப்பினா். செவ்வாய்க்கிழமை மேலூரிலிருந்து திருப்பத்தூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த மினிவேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.