இருவேறு விபத்துகளில் 2 பெண்கள் பலி

மேலூா் அருகே வியாழக்கிழமை, இருவேறு விபத்துகளில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

மேலூா்: மேலூா் அருகே வியாழக்கிழமை, இருவேறு விபத்துகளில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.

மேலூா்- மதுரை சாலையில் வியாழக்கிழமை காலை சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. அதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்த அந்தப் பெண் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, சூவாஞ்சான்பட்டியிலிருந்து சீா்வரிசைப் பொருள்களை ஏற்றிவந்த லாரி மோதியதில், பெண் ஒருவா் பலத்த காயமடைந்து மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com