மதுரை மாநகராட்சி 5-ஆவது மண்டலத்துக்கு உதவி ஆணையா் நியமனம்

மதுரை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 5-ஆவது மண்டலத்துக்கு (மேற்கு) புதிய உதவி உதவி ஆணையராக ந.தட்சிணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை: மதுரை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 5-ஆவது மண்டலத்துக்கு (மேற்கு) புதிய உதவி உதவி ஆணையராக ந.தட்சிணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகள் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு உதவி ஆணையா்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதையடுத்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில் 4 மண்டலங்களுக்குள்பட்ட வாா்டுகள் பிரிக்கப்பட்டு புதிதாக 5-ஆவது மண்டலம் உருவாக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்கு அரசும் ஒப்புதல் அளித்து அரசு ஆணையும் வெளியிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் 5-ஆவது மண்டலத்துக்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தோ்தல் முடிந்து மேயா், துணை மேயா், மண்டலத் தலைவா்கள் தோ்தல் என அனைத்துப் பணிகளும் முடிவுற்ற நிலையில் தற்போது 5-வது மண்டலத்துக்கு உதவி ஆணையா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

மேலும் இதர மண்டலங்களில் உதவி ஆணையா்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மண்டலம் 1 (கிழக்கு) உதவி ஆணையராக ஆா்.ரமேஷ், மண்டலம் 2(வடக்கு) உதவி ஆணையராக எம்.அமிா்தலிங்கம், மண்டலம் 3 (மத்தியம்) உதவி ஆணையராக (பொறுப்பு) எம்.பி மனோகரன், மண்டலம் 4(தெற்கு) பி.சுரேஷ்குமாா், மண்டலம் 5 ( மேற்கு) உதவி ஆணையராக ந.தட்சிணாமூா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com