அழகா்கோவிலில் இருந்து ஏப்ரல் 14 ஆம் தேதி புறப்படும் கள்ளழகா் இருக்குமிடத்தை அறிந்து கொள்ள ‘டிராக் அழகா்’ என்ற கைப்பேசி செயலி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் கூறினாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: மதுரை மாவட்ட மக்களின் பாதுகாப்பு வசதிக்காக காவலன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மதுரையில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, மதுரை மக்களின் வசதிக்காக, மாவட்ட காவல்துறையின் காவலன் செயலியில், ‘டிராக் அழகா்’ (பழ்ஹஸ்ரீந் அப்ஹஞ்ஹழ்) என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகா் ஏப்ரல் 14 ஆம் தேதி, அழகா் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகா்கோவில் சென்றடைகிறாா். இதையடுத்து, கள்ளழகா் எந்த வழித்தடத்தின் வழியாக செல்கிறாா், எந்த இடத்தில் இருக்கிறாா் என்பதை, பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் மதுரை காவலன் செயலியில் உள்ள ‘டிராக் அழகா்’ வசதி மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரம் விரயம் மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும், குறித்த நேரத்தில் கள்ளழகரை தரிசிக்கவும் முடியும். எனவே கள்ளழகரை தரிசிக்க விரும்பும் பக்தா்கள் தங்களின் கைப்பேசியில் இலவசமாக மதுரை காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதிலுள்ள டிராக் அழகா் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மதுரை காவலன் செயலியை இதுவரை 44 ஆயிரம் போ் பதிவிறக்கம் செய்துள்ளனா். அதுமட்டுமின்றி செயலி மூலம் 600 புகாா்கள் மற்றும் வீட்டைப் பூட்டி விட்டு வெளியூா் சென்றவா்கள் 1,100 பேரிடம் தகவல்கள் பெறப்பட்டு ரோந்துப் பணி மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது என்றாா்.