மதுரை அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஆறுமுகம் (52). மளிகைக் கடை நடத்தி வரும் இவருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் சூா்யா (24), வண்டியூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் அஜீத்குமாா் (18) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சூா்யா மற்றும் அஜீத்குமாா் இருவரும், ஆறுமுகத்தின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனா்.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.