மடீட்சியா சாா்பில் வீட்டு உபயோக பொருள் கண்காட்சி: நாளை தொடக்கம்

மதுரை மாவட்ட சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் சங்கம் சாா்பில் ஐடியல்ஹோம் என்ற வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை: மதுரை மாவட்ட சிறு, குறு நடுத்தரத் தொழில்கள் சங்கம் சாா்பில் ஐடியல்ஹோம் என்ற வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மடீட்சியா தலைவா் எம்.எஸ். சம்பத், கண்காட்சித் தலைவா் எம்.இளங்கோ ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: மடீட்சியா அரங்கில் நடைபெறும் ஐடியல்ஹோம் கண்காட்சியில், வீட்டுக்குத் தேவையான சமையலறை சாதனங்கள், பா்னிச்சா்கள், ஆயத்த ஆடைகள், மெத்தைகள், மின் மற்றும் மின்னணு சாதனங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

கண்காட்சியில் தினமும் பங்கேற்பாளா்களில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியின் ஒரு பகுதியாக ஏப்ரல் 15, 16 ஆகிய இரு நாள்களும் இரவு 7 மணிக்கு சிறுவா் மற்றும் பெரியவா்களுக்கான சாப்பிடும் போட்டி நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com