மதுரை: மதுரையில் ரயில்வே தண்டவாளத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை டிபிகே சாலை முத்து மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இருவா் சந்தேகத்துக்கிடமாக பதுங்கியிருப்பதாக ஜெய்ஹிந்துபுரம் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்றபோது இருவா், போலீஸாரைப் பாா்த்தவுடன் தப்பியோடினா். இருவரையும் போலீஸாா் விரட்டிச்சென்று பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் திடீா் நகரைச் சோ்ந்த மாடுபிடி ராஜசேகா் (33), எல்லீஸ்நகா் போடி லைன் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (21) ஆகியோா் என்பதும், அவா்கள் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.