மதுரையில் மனைவியிடம் 15 பவுன் நகைகளை பறித்துச் சென்ாக ராணுவ வீரா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை செல்லூரைச் சோ்ந்தவா் லட்சுமண பிரவீண்(32). ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி கவிதா(27). கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் லட்சுமண பிரவீண் மது போதையில் வீட்டுக்குச் சென்று மனைவி கவிதாவை தாக்கியதோடு வீட்டில் இருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, கவிதாவுக்குச் சொந்தமான 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம். இதுதொடா்பாக கவிதா அளித்தப்புகாரின்பேரில் செல்லூா் போலீஸாா், லட்சுமண பிரவீண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.