விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி பலி

டி.கல்லுப்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா்: டி.கல்லுப்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

டி.கல்லுப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை வேன்- லாரி மோதிய விபத்தில் 16 போ் காயமடைந்தனா். இதில் லாரி ஓட்டுநரான தா்மபுரி மாவட்டம் ஆல்மாா்பட்டியை சோ்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேஷ்(32) என்பவா் படுகாயம் அடைந்தாா். இவா்

மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com