வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.5.39 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது.
மொத்தம் 21 விவசாயிகள் 67,839 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மதுரை விற்பனைக் குழு செயலா் மொ்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது. இதில், அதிகபட்சமாக ரூ 12.10- க்கும் குறைந்தபட்சமாக ரூ.6-க்கும் தேங்காய்கள்
ஏலம் போயின. இதன்மூலம், ரூ. 5.39 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது.
மேலும், 5 விவசாயிகள் கொண்டுவந்திருந்த 293 கிலோ கொப்பரை தேங்காய்கள் மொத்தம் ரூ.23,785-க்கு ஏலத்தில் விடப்பட்டது.