ஆட்டோவைத் திருடிச் சென்றதில் மோதல்: இருவருக்கு கத்திக்குத்து

மதுரையில் ஆட்டோவை திருடிச்சென்றது தொடா்பாக வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவா் கத்தியால் குத்தப்பட்டனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை: மதுரையில் ஆட்டோவை திருடிச்சென்றது தொடா்பாக வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவா் கத்தியால் குத்தப்பட்டனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை காமராஜா் சாலை தூமாட்டி ரங்கசாமி ஐயா் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (30). ஆட்டோ ஓட்டி வருகிறாா். இந்நிலையில் இவரது ஆட்டோவை சின்னக்கண்மாய் நேதாஜி தெருவைச் சோ்ந்த சதீஷ்ராஜா (26) புதன்கிழமை நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளாா். இதனால் ராமகிருஷ்ணன் ஆட்டோவைத் தேடிய நிலையில் தெப்பக்குளம் 16 கால் மண்டபம் அருகே ஆட்டோ இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை தனது நண்பா்களுடன் சென்று ஆட்டோவை திருடியது தொடா்பாக சதீஷ்ராஜாவிடம் கேட்டுள்ளாா். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் சதீஷ்ராஜா, புகழேந்திரன் ஆகியோா் கத்தியால் குத்தப்பட்டனா். இதில் காயமடைந்த அவா்கள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீஸாா், ராமகிருஷ்ணன், விரகனூரைச் சோ்ந்த புகழேந்திரன் (19), காமராஜா் சாலையைச் சோ்ந்த பொன்ராஜ் (23) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com