மதுரை: மதுரையில் பூட்டிய வீடுகளில் திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனா்.
மதுரை கூடல்புதூா் பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடும் சம்பவங்கள் தொடா்ந்து வந்தன. இந்நிலையில் இந்த சம்பவங்களில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாநகரக்காவல் ஆணையா் டி.செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
அதன்பேரில் மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா்(வடக்கு) டி.கே.ராஜசேகரன் நேரடி பாா்வையின் கீழ் செல்லூா் உதவி ஆணையா் விஜயகுமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் திருட்டு சம்பவங்களில் விருதுநகரை சோ்ந்த ஆனந்த் மற்றும் பொள்ளாச்சியைச் சோ்ந்த ரெங்கநாதன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாநகரக் காவல் ஆணையா் மற்றும் துணை ஆணையா் உள்ளிட்டோா் பாராட்டினா்.