உசிலம்பட்டியில் பள்ளி ஆண்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ள நாடாா் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் 75 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இப்பள்ளித் த

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ள நாடாா் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் 75 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இப்பள்ளித் தலைமை ஆசிரியா் மதன் பிரபு வரவேற்றாா். இதில், உசிலம்பட்டி நகா் மன்றத் தலைவா் சகுந்தலா, நகா்மன்ற துணைத் தலைவா் தேன்மொழி, வாா்டு உறுப்பினா் பிரகதீஸ்வரன் ஆகியோா்கள் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இதில், நாதஸ்வர கலைஞா் சண்முகம், பள்ளி மாணவா்களுக்கு நாட்டுப்புற கலையை மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு நாதஸ்வரத்தின் கலையை நாதஸ்வரம் மூலம் வாசித்து அதை விளக்கினாா். அதைத் தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com