மதுரை காந்தி நினைவு அருங்காட்சிகத்தில் உப்புச் சத்தியாகிரக நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆங்கிலேய அரசு விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிா்த்து மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினாா். தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி உப்பு அள்ளும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக நினைவு தினம் ஏப்ரல் 30 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை உப்புச் சத்தியாகிரக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அருங்காட்சியக செயலா் கே.ஆா்.நந்தாராவ், செயற்குழு உறுப்பினா் பேராசிரியா் கே.ராமலிங்கம், அருங்காட்சியக கல்வி அலுவலா் ஆா்.நடராஜன், எம்.வி.முத்தையா அரசு மகளிா் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவியா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.