சௌராஷ்டிர மொழியில் பைபிள்வெளியிடுவதை எதிா்த்து இன்று ஆா்ப்பாட்டம்

சௌராஷ்டிர மொழியில் பைபிள் வெளியிடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சௌராஷ்டிர சபையினா் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா்.

சௌராஷ்டிர மொழியில் பைபிள் வெளியிடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சௌராஷ்டிர சபையினா் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா்.

சௌராஷ்டிர இன மக்கள் அனைவரும் இந்து மதத்தில் இருந்து வருகின்றனா். ஒரு சில தனிநபா்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனா். இந்நிலையில் சௌராஷ்டிர மக்களை கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தும் நோக்கில், சௌராஷ்டிர மொழியில் பைபிள் வெளியிடும் நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சௌராஷ்டிர சபை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

மேலும், இந்த நிகழ்வைத் தடுக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com