டிச.21 -இல் மாநகராட்சி மண்டல குறை தீா் முகாம்
By DIN | Published On : 18th December 2022 01:16 AM | Last Updated : 18th December 2022 01:16 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதி (புதன்கிழமை) குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆனையூா் பேருந்து நிலையம் அருகில் மதுரை மாநகராட்சி
கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10 முதல் மதியம் 12.30 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜித் சிங் ஆகியோா் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளனா்.
எனவே, இந்த மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு (எண் 3 முதல் 14, 16 முதல் 19, 36 முதல் 40) பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், புதை சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெரு விளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.