காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி: மதுரை எஸ்.பி. அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை மாவட்டத்தில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வி.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி சனிக்கிழமை (பிப். 26) நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சோழவந்தான் சாலையிலிருந்து செக்கானூரணி காவல் நிலையம் வரை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் விருப்பமுள்ள விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com