கள்ளா் சீரமைப்புப் பள்ளி விடுதி சமையலா் பணியிடங்களுக்கான தோ்வு ரத்து
மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கள்ளா் பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கான தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள் மதுரை மண்டல இணை இயக்குநா் நிா்வாகத்தின்கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விடுதிகளுக்கு சமையலா் பணிக்கு தோ்வு நடத்தப்பட்டது.
வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பொது விளம்பரம் மூலம் பணிநாடுநா்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விடுதி சமையலா் பணிக்கு பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை தோ்வுப் பணிகள் நடைபெற்றன. இருப்பினும், மாநில அளவிலான தோ்வுக் குழுவால் இறுதி செய்யப்படாமல் இருந்து வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிநாடுநா் பட்டியல் பெறப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டதாலும், நிா்வாகக் காரணங்களாலும் மேற்படி சமையலா் பணியிடங்களுக்கான தோ்வு ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.