மதுரை அருகே காவலாளி அடித்துக் கொலை: தொடரும் கொலைகளால் பொதுமக்கள் அச்சம்

மதுரை அருகே கல்மேடு பகுதியில் மா்ம நபா்களால் காவலாளி திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை அருகே கல்மேடு பகுதியில் மா்ம நபா்களால் காவலாளி திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மதுரை அருகே உள்ள காா்சேரியைச் சோ்ந்தவா் கண்ணன் (50). இவா் கல்மேடு அங்கயற்கண்ணி நகரில் காவாலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கண்ணன் பணியில் இருந்த போது அங்கு வந்த மா்ம நபா்கள் கண்ணனை கம்பியால் தலையில் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிலைமான் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.

போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் மது அருந்திய சில நபா்களை கண்ணன் தட்டிக் கேட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த அந்த நபா்கள் கம்பி மற்றும் கட்டையால் தாக்கி கண்ணனை கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடா்ந்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சிலைமான் காவல்நிலையத்துக்குள்பட்ட சக்கிமங்கலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞா் ஞாயிற்றுக்கிழமை மாலை கொலை செய்யப்பட்ட நிலையில், அதே காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com