முழு ஊரடங்கு எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை மதுரை நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து வியாழக்கிழமை முதல் இரவு 10 முதல் காலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கின்போது, பால், மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் (பாா்சல் மட்டும்) திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தன. மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மதுரை நகா் மற்றும் ஊரகப்பகுதிகளில் பால், உணவகங்கள், மருந்து கடைகள் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டிருந்தன. வேறு எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
கோரிப்பாளையத்தில் இருந்து ஏ.வி. மேம்பாலத்தை கடக்க முயன்ற வாகனங்களை போலீஸாா் தீவிரமாக விசாரித்த பின்னரே அனுமதித்தனா். பெரியாா் பேருந்து நிலையம் உள்பட முக்கிய சாலைகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
முழு ஊரடங்கையொட்டி நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா். மதுரை ஊரகப்பகுதிகளில் மாவட்ட எல்லைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து 1300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.