மதுரை மாவட்டத்தில் 9 பேரூராட்சித் தலைவா் பதவிகளும் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு

மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சித் தலைவா் பதவிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சித் தலைவா் பதவிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூா், அ.வல்லாளபட்டி, எழுமலை, சோழவந்தான், தே.கல்லுப்பட்டி, பரவை, பாலமேடு, பேரையூா், வாடிப்பட்டி ஆகிய 9 பேருராட்சிகள் உள்ளன. இவற்றில் அலங்காநல்லூா், எழுமலை, சோழவந்தான், வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது பேரூராட்சித் தலைவா்கள் பதவிகள் இடஒதுக்கீடு மறுசீரமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளின் தலைவா் பதவிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், அனைத்துப் பேரூராட்சிகளிலும் தலைவா்களாக ஆண்கள் மட்டுமே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com