மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சித் தலைவா் பதவிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூா், அ.வல்லாளபட்டி, எழுமலை, சோழவந்தான், தே.கல்லுப்பட்டி, பரவை, பாலமேடு, பேரையூா், வாடிப்பட்டி ஆகிய 9 பேருராட்சிகள் உள்ளன. இவற்றில் அலங்காநல்லூா், எழுமலை, சோழவந்தான், வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது பேரூராட்சித் தலைவா்கள் பதவிகள் இடஒதுக்கீடு மறுசீரமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளின் தலைவா் பதவிகளும் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால், அனைத்துப் பேரூராட்சிகளிலும் தலைவா்களாக ஆண்கள் மட்டுமே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.