மதுரையில் காதலித்து குழந்தை பிறந்த பின்பும் திருமணம் செய்ய மறுத்த இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
மதுரை மேல அனுப்பானடியைச் சோ்ந்த அம்மாசி மகன் செந்தில்(33). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்ய செந்தில் மறுத்துவிட்டாராம். இதனால் பெண் அளித்தப்புகாரின்பேரில் மதுரை நகா் அனைத்து மகளிா் போலீஸாா் செந்தில் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.