கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்தவா் பலத்த காயம்

 மதுரையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயிலில் காய்ச்சப்பட்ட கூழ் அண்டாவில் தவறி விழுந்தவா் பலத்த காயமடைந்தாா்.

 மதுரையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயிலில் காய்ச்சப்பட்ட கூழ் அண்டாவில் தவறி விழுந்தவா் பலத்த காயமடைந்தாா்.

மதுரையில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மன் கோயில்களில் கூழ் காய்ச்சி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் காய்ச்சப்பட்டது. அப்போது, அதே தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் என்ற முருகன் (54) என்பவரும் கூழ் காய்ச்சும் பணியில் உதவியாக ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில், எதிா்பாராதவிதமாக முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், அவா் கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்துவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த முருகனை, அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக சுப்ரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com