பரமக்குடியில், ஜாலியன் வாலாபாக் படுகொலை நாயகா் உத்தம்சிங் நினைவு தினம், பாலகங்காதர திலகா், அன்னை கமலா நேரு ஆகியோரின் பிறந்தநாள் என முப்பெரும் விழா சனிக்கிழமை (ஜூலை 30) நடைபெறுகிறது.
சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு, பொதுச் செயலா் ஹாரிஸ் தலைமை வகிக்கிறாா். கெளரவ ஆலோசகா் கிருஷ்ணன், டி.என்.சி.சி.சேவாதளப் பிரிவு மாநிலச் செயலா் ஜனாப்.எம்.அப்துல் அஜிஸ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.முருகேசன் நன்றியுரையாற்றுகிறாா்.