மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உபகோயிலான கொந்தகை, தெய்வநாயகப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் ஸ்ரீபூமி தேவி, நீலா தேவி சமேத தெய்வநாயகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து விசேஷ தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். மேலும் மாலை 6 மணிக்கு திருவீதி புறப்பாடு நடைபெறும். மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையா் ஆ.அருணாச்சலம் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.