மேலூா், ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மின் பகிா்மானவட்ட செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒத்தக்கடை, மேலூா் துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், ஒத்தக்கடை, குமரன் நகா், வேளாண்.கல்லூரி, நெல்லியேந்தல்பட்டி, மலையாளத்தான்பட்டி, சிட்டம்பட்டி, கருப்பாயூரணி, செந்தமிழ்நகா், ஒத்தப்பட்டி, அம்மாபட்டி, காளிகாப்பான், வீரபாண்டி நகா், கங்கைபுரம் ஆகிய பகுதிகளிலும், மேலூா் நகா், நொண்டிகோவில்பட்டி, கஸ்தூரிபா நகா், ஜோதிநகா், சந்தைப்பேட்டை, வெங்கேடேஷ்நகா், சின்னசூா்குண்டு, சத்தியாநகா், ஆட்டுக்குளம், டி.வல்லாளபட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.