திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூா் காளமேகப்பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூா் காளமேகப்பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில், ஜூன் 3 ஆம் தேதி அங்குராா்பணம், வாஸ்துசாந்தி, கெருடபிரதிஷ்டையுடன் திருவிழா நிகழ்வுகள் தொடங்கின.

இந்நிலையில், வைகாசித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலையில், காளமேகப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் வலம்வந்தாா். இத்திருவிழா ஜூன் 14 ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com