மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், மகன் கண் முன் தாய் உயிரிழந்தாா்.
வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுநீரேத்தான் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). பால் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி பிச்சையம்மாள் (60). இந்நிலையில், பிச்சையம்மாள் தனது மகன் காா்த்திக்குடன் வாடிப்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். வாடிப்பட்டி நகா் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில், பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து தொடா்பாக, வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.