மதுரை அருகே திருமோகூரில் உள்ள காளமேகப்பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த 4ஆம் தேதி முதல் இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக காளமேகப்பெருமாள் தேருக்கு எழுந்தருளினாா். ஆறுகரை கிராம அம்லகாரா் வகையறாவினா் தேரை வடம்பிடித்து இழுத்தனா். மாலை 6 மணியவில் தோ் நிலைக்குவந்தது. தொடா்ந்து காளமேகப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.