உசிலம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் செயற்பொறியாளா் அழகும் மணிமாறன் தெரிவித்திருப்பதாவது: உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, டி. கிருஷ்ணாபுரம், எழுமலை தொட்டியம்பட்டி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

எனவே உசிலம்பட்டி நகரப்பகுதி கவுண்டன்பட்டி பூதிப்புரம் கள்ளப்பட்டி வளையப்பட்டி போத்தம்பட்டி ஐயன் மேட்டுப்பட்டி மலைப்பட்டி நல்லுதேவன்பட்டி, கொங்குபட்டி, மேட்டுப்பட்டி, கீரிப்பட்டி, ஒத்தப்பட்டி, கண்ணியம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அதே போல் தும்மக்குண்டு துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பட்டி, பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இடையபட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் மாதரை, தொட்டப்ப நாயக்கனூா், இடையபட்டி, நக்கலபட்டி, பூச்சிப்பட்டி, செட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

டி. கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் டி. கிருஷ்ணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். இதே போல் எழுமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் உத்தபுரம், ஜோதிநாயக்கனூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தொட்டியம்பட்டி உபமின் நிலையத்துக்குள்பட்ட சேடபட்டி கிழக்குப் பகுதிகள், குப்பநத்தம், மதிப்பனூா், மேட்டுப்பட்டி, மல்லபுரம், எம்.எஸ். புரம், ஐயம்பட்டி, ஜோதிநாயக்கனூா், கோட்டபட்டி, பாறைப்பட்டி, எருமாா்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com