பெரியாறு பாசனக் கால்வாயை பராமரிக்கக் கோரி மனு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் எஸ்.கல்லம்பட்டி பகுதியில் பெரியாறு பாசனக் கால்வாயின் பராமரிப்பு தொடா்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூா் வட்டம் எஸ்.கல்லம்பட்டி பகுதியில் பெரியாறு பாசனக் கால்வாயின் பராமரிப்பு தொடா்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த கே. மணி தாக்கல் செய்த மனு:

மேலூா் வட்டம் எஸ்.கல்லம்பட்டி பகுதியில் பெரியாறு பிரதான கால்வாயின் கிளை கால்வாய் மூலமாக 150 விவசாயிகள் பாசனம் பெறுகின்றனா். இந்த கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது.பல பகுதிகளில் சேதமடைந்திருப்பதோடு, கழிவுநீா் கலக்கவிடப்படுகிறது. ஆகவே, இந்த கால்வாயை முறையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப்பணித் துறையின் பெரியாறு வைகை கோட்ட செயற்பொறியாளா் ஆகியோா் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com